என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
Next Story






