search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2000 xerox"

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார். அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.

    நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர். டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.


    ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது. டோக்கன் விவகாரத்தை விடுத்து வேறு சில கருத்துக்களையும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். மின்சாரம் திருடியதாகவும், அதற்காக அபராதம் நாங்கள் செலுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இன்று அதன் விவர நகலை தருகிறேன். விவசாயத்துக்கு போகிற தண்ணீரை ஜெனரேட்டர் பழுதின் காரணமாக தண்ணீரை எடுத்ததற்காக அபராதம் விதித்தனர்.

    மின்சாரம் திருடி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பரம்பரையில் நான் பிறக்கவும் இல்லை. இவர்களை மாதிரி திருட்டு சாராயம் காய்ச்சி பாட்டிலில் அடைத்து விற்கவில்லை. மின்சாரம் திருடியதாக இனி குற்றம்சாட்டினால், அது தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நான் தருகிறேன். டோக்கன் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை இன்று செய்து விட்டார்கள். இதைவிட கேவலமாக அரசியல் செய்ய முடியாது. ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். கருத்து கணிப்பு இருக்கட்டும். நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×