search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 years in prison"

    • ராஜா உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
    • அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு ராஜா வந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதற்கு பயந்து அந்த மாணவியும் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லை. இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து மாணவி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார்.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 20 வருட சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பளி த்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    • சிறுமி திருமணம் குறித்து கேட்கவே, உடனே சின்னப்பனையூரில் உள்ள கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிறுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
    • போகசோ, சிறார் திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புரசம்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது25). ஜேசிபி ஆபரேட்டர். இவரது உறவினரான 13 வயது சிறுமி அவரது வீட்டில் தங்கி திருச்சியில் படித்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஜன. 15ம் தேதி சிறுமிக்கு பிறந்த நாள் வந்துள்ளது.

    சிறுமிக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்த சேகர், அவரை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2 மாதங்கள் கழித்து சேகர் வெளிநாடு செல்வதாகச் சிறுமியிடம் தெரிவித்துள்ளார். சிறுமி திருமணம் குறித்து கேட்கவே, உடனே சின்னப்பனையூரில் உள்ள கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சிறுமியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

    கடந்த 2020 நவம்பரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சேகர் உன்னை திருமணம் செய்துக் கொண்டு விட்டேனே எனக்கூறி சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்தாண்டு நவ. 11ம் தேதி திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சம்பவம் குறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ, சிறார் திருமண தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் சேகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.நசீமாபானு அளித்த தீர்ப்பில், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, சிறுமியைக் கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒராண்டு சிறைத்தண்டனை, சிறார் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.1,000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

    ×