search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 college students go missing"

    • கீர்த்தனா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • 2 மாணவிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை துடியலூர் அருகே உள்ள அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி.

    இவரது மகள் கீர்த்தனா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கீர்த்தனாவை தேடி வருகிறார்கள்.

    மதுக்கரை அருகே உள்ள மரப்பாலத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சுவேதா (19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இது குறித்து மாணவியின் தந்தை செல்வராஜ் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி சுவேதாவை தேடி வருகிறார்கள். 

    ×