search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 Woman gives birth to"

    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
    • நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (22).

    இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான இருந்த நிந்யா நேற்று இரவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக நம்பியூரில் இருந்து விரைந்து வந்தது. மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பரிசோதித்த பின்னர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் கொன்னமடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நித்யாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும்-சேயும் பத்திரமாக கோபி செட்டி பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் நந்தகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கடுக்காம் பாளையம் பகுதி அருகே சென்ற போது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    மருத்துவ நிட்புநர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வள்ளிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ×