search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
    X

    108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தையுடன் மருத்துவ குழுவினர்.

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
    • நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (22).

    இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான இருந்த நிந்யா நேற்று இரவில் பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக நம்பியூரில் இருந்து விரைந்து வந்தது. மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பரிசோதித்த பின்னர் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் கொன்னமடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நித்யாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நந்தகுமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும்-சேயும் பத்திரமாக கோபி செட்டி பாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுனர் நந்தகுமார் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×