என் மலர்
நீங்கள் தேடியது "முஸ்தாபிஜூர் ரகுமான்"
- வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல.
- வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், கொல்த்தாக நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசுர் ரகுமானை ஏலம் எடுத்துள்ளதாக, இந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மீது பாஜக மற்றும் இந்து அமைப்புத் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். அவரை துரோகி என்று குறிப்பிட்டனர். இது பெரிய விவகாரமாக வெடிக்க பிசிசிஐ, முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்க கே.கே.ஆர். அணியிடம் கேட்டுக்கொண்டது. பிசிசிஐ உத்தரவின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை விடுவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்களை போன்று, வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்கக் கூடாது என மேற்கு வங்க மாநில முன்னாள் பாஜக தலைவர் திலிப் கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திலிப் கோஷ் கூறியதாவது:-
வங்கதேசத்தில் நடைபெற்று கொண்டிருப்பது யாருக்கும் நல்லது அல்ல. இந்திய அரசாங்கம் தனது கடமையைச் செய்து வரும் நிலையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களால் மேற்கு வங்க மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது மனிதாபிமானமற்ற செயல். இதற்குப் பின்விளைவுகள் இருக்கும்.
வங்கதேசத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு நிலையான அரசாங்கம் அமைய வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உயிர்களும் உடைமைகளும் பாதுகாக்கப்படும். எல்லைப் பதட்டங்களும் குறையும்.
நான் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்படாதது போலவே, வங்கதேச கிரிக்கெட் வீரர்களும் அனுமதிக்கப்படக் கூடாது. இந்தக் கோரிக்கை கொல்கத்தாவில் இருந்து வந்தது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் அடைந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பெறவில்லை. அந்த தொடரை வங்காளதேச அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்ததால் நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது’ என்றார். #BCB #MustafizurRahman






