என் மலர்
நீங்கள் தேடியது "உலக தற்கொலை தடுப்பு தினம்"
- ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
புதுச்சேரி:
ஆண்டு தோறும் செப்டம் பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலை தொடர்பு மனநல திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பிரிவு அறிக்கைபடி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-ல் தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
இதற்குப் போதைப்பொருள் பழக்கம், மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவர்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவர்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும்.
யாருக்காவது மனசோர்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவர்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
சென்னை:
தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அற்ப காரணங்களுக்காக எல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது.
தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.
மேலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளைப் பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
தற்கொலை எண்ணம் எழுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
உண்மையான காரணங்களைக் கண்டறிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் தேவை.
எனவே, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தால் தற்கொலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்பதே நம்பிக்கையாகும்.






