என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 செப்டம்பர் 2025: படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை.
- வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-3 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : ஆயில்யம் காலை 9.29 மணி வரை பிறகு மகம்
யோகம் : மரண யோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகனத்தில் சேவை
இன்று பிரதோஷம், ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமலையில் திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலையில் சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-பெருமை
கடகம்-வாழ்வு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-நலம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-நிறைவு
தனுசு- உறுதி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-நம்பிக்கை
மீனம்-பயணம்






