என் மலர்
வழிபாடு

மாத சிவராத்திரியும், வழிபாட்டு பலன்களும்
- புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
- மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.
தமிழ் மாதந்தோறும் 2 சிவராத்திரிகள் வருகின்றன. அதற்கான சிறப்புகள் வருமாறு:-
சித்திரை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும். உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.
வைகாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும். சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;
ஆனி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்.
ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜை செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;
ஆவணி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால் பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும். மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
ஐப்பசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலையமாட்டோம். வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம். அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;
கார்த்திகை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் விரதம் இருந்துவழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;
தை மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நெல் முதலான தானியங்கள் நன்கு விளையும். அள்ளி வழங்கிய தான பலன் கிடைக்கும்; மாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான். கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்.
பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால், சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும். அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன என்கிறனர் ஆன்மீக பெரியவர்கள்.






