என் மலர்tooltip icon

    வழிபாடு

    கார்த்திகை தீபம் - எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?
    X

    கார்த்திகை தீபம் - எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?

    • கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.
    • மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    கார்த்திகை திருநாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும் கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, மிக வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

    வீட்டில் விளக்கேற்றும்போது, நமது விருப்பத்திற்கேற்ற எண்ணிக்கையில் விளக்கேற்றலாம் என்றாலும் குறைந்தபட்சம் 27 விளக்காவது ஏற்றுவது சிறப்பாகும்.

    27 விளக்குகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக அமைகின்றன. மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசல், நிலைவாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம்.

    விளக்கை வெறும் தரையில் ஏற்றக்கூடாது. வாழை இலையின் மீது வைத்து ஏற்றலாம். ஒரு விளக்கை சாமி படத்தின் முன்பு வைத்து, நெய் தீபமாக ஏற்றி வழிபடுவது விசேஷமாகும்.

    Next Story
    ×