என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- சிவராத்திரி தினத்தன்று சிவாலயங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும்.
- வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
சென்னையில் எத்தனையோ சிவாலயங்கள் உள்ளன.
அவற்றுள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை திருமயிலை எனப்படும் மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், திருவேற்காடு, திருவலிதாயம் (பாடி), திருமுல்லைவாயல் ஆகிய 6 தலங்கள் பெற்றுள்ளன.
மகா சிவராத்திரி தினத்தன்று இந்த 6 தலங்களில் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், பலன்களையும் தரும்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த 6 சிவாலயங்களிலும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வரிசையில் வந்து வழிபாடு நடத்த வசதி செய்யப்படும்.
இரவு முழுக்க தங்கி இருக்கும் போது தேவைப்படும் குடிநீர் வசதி உள்பட எல்லா வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
சிவராத்திரி தினத்தன்று சிவாலயங்களுக்கு வரும் சிவபக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பது அளவிட முடியாத அளவுக்கு புண்ணியம் தரும்.
வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சிவராத்திரி தினத்தன்று அன்னதானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
அன்னதானம் செய்ய இயலாதவர்கள், தங்களால் முடிந்த அளவுக்கு இரவு கண் விழித்திருக்கும் பக்தர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் கொடுத்து உபசரிக்கலாம்.
இதற்காக சிவாலய நிர்வாக அதிகாரிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.
சிவ பக்தர்களுக்கு செய்யும் உதவியானது, மிக எளிதாக சிவன் அருளைப் பெற்றுத்தரும் என்பது ஐதீகம்.
- ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
- இரவில் கோவிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும்.
இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம்.
ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும்.
இரவில் கோவிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.
உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும்.
சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது.
அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.
அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
- “சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
- பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
"சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.
பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால் பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.
திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சிவராத்திரியன்று விரதமிருந் தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார்.
மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.
வழிபாடு பலன்கள்
அபிஷேகம் - பாவம் அகலும்,
பீட பூஜை - சாம்ராஜ்யம் கிடைக்கும்,
கந்தம்-சகல சவுபாக்கியத்தையும் அளிக்கும்,
புஷ்பம்-அமைதியும், செழுமையும் தரும்,
தூபம்-நல்ல வாசனை தரும்,
தீபம் - உடல் நலம் தரும்,
நைவேத்தியம்-மகாபோகத்தைத் தரும்,
தாம்பூலம்- லட்சுமி கடாட்சத்தைத் தரும்,
நமஸ்காரம்-வாக்கு சாதூர்யம் தரும்,
ஜபம் - அஷ்ட ஐஸ்வர்யம் தரும்,
ஹோமம்-செல்வம் தரும்,
அன்னதானம்-திருப்தியான வாழ்வு அமையும்.
- மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
- முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
- தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
- சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் அத்தகைய தொடர் ஓட்டம் இடம் பெறுகிறது.
சிவராத்திரிக்கு முதல் நாளும், சிவராத்திரி அன்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் தொடர் ஓட்டமாகச் சென்று பன்னிரண்டு சிவாலயங்களைத் தரிசிக்கின்றனர்.
அத்தலங்கள் விவரம் வருமாறு:
1. திருமலை
2. திருக்குறிச்சி
3. திற்பரப்பு
4. திருநந்திக்கரை
5. பொன்மலை
6. பன்னிப்பாக்கம்
7. கல்குளம்
8. மேலங்கோடு
9. திருவிடைக்கோடு
10. திருவிதாங்கோடு
11. திருப்பன்றிக்கோடு
12. திருநட்டாலம்
- எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
- வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.
2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
- காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
- முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
சிவதரிசன பலன்
காலையில் சிவதரிசனம் - அறச்சிந்தனையை வளர்க்கும்
முற்பகல் சிவதரிசனம் - நற்செல்வம் தரும்
மாலை சிவதரிசனம் - விரும்பியதை அளிக்கும்
இரவு சிவதரிசனம் - ஞானத்தை அளிக்கும்
பிரதோஷகால சிவதரிசனம் - பிறவாமையைத் தரும்
மகிமை பெற்ற பன்னிரு சிவாலயங்கள்:
1. திருவண்ணாமலை
2. தீக்குறிச்சி
3. திருப்பரப்பு
4. திருவந்திக்கரை
5. பொன்மலை
6. திருபன்றிக்காடு
7. பனிப்பாக்கம்
8. கல்குளம்
9. மேலோங்கோடு
10. திருவிடைக்காடு
11. திருவிதாங்கூர்
12. திருநட்டாலம்.
- கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
- பாசுபத விரதம்-தைப்பூசம்,
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
அவை:
சோமாவார விரதம்-திங்கள்,
உமாமகேஸ்வரர் விரதம்-கார்த்திகை பவுர்ணமி,
திருவாதிரை விரதம்-மார்கழி,
சிவராத்திரி விரதம்-மாசி,
கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
பாசுபத விரதம்-தைப்பூசம்,
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,
கேதார விரதம்ஸ்ர-தீபாவளி அமாவாசை.
- உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு
- திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.
சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.
1. புற்றுமண் லிங்கம்: முத்தி
2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்
3. பச்சரிசி லிங்கம்: பொருள் பெருக்கம்
4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்
5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்
6. அரிசி மாவு லிங்கம்: உடல் வலிமை
7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு
8. தயிர் லிங்கம்: நல்லகுணம்
9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை
10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்
11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி
12. சர்க்கரை, வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்
13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு
14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி
15. உருத்திராட்ச லிங்கம்: நல்ல அறிவு
16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லா வகை செல்வம்.
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
- சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள்.
அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.
உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன்.
அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும். அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
- இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
- விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.
சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள்.
இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.
விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது.
இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது.
அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.
உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.
இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.
நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.
எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.






