என் மலர்
ஆன்மிகம்
- இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.
- மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.
பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.
தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன.
இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.
மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.
எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது.
முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.
- தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் குகையில் கொலுவீற்றிருக்கிறார்.
- அடிவாரத்தில் இருந்து முருகன் சன்னதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலை ஏற வேண்டியதிருக்கும்.
தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் குகையில் கொலுவீற்றிருக்கிறார்.
அடிவாரத்தில் இருந்து முருகன் சன்னதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலை ஏற வேண்டியதிருக்கும்.
அந்த காலத்தில் மலை ஏற படிக்கட்டுகள் கிடையாது.
செங்குத்தான் பாறையில் ஏற இரண்டு இடங்களில் மட்டும் லேசாக படிக்கட்டுகள் செதுக்கு பிடிக்க கைப்படி வைத்து இருப்பார்கள். மற்றபடி படிக்கட்டுகள் ஏதும் கிடையாது.
பக்தர்கள் கல்லிலும், புதரிலும் மிதித்தும் தாண்டியும்தான் மலை ஏறுவார்கள்.
நாளடைவில் பக்தர்களின் பாதங்கள் மூலம் உருவான பாதை நடக்க ஓரளவு எளிதாக இருந்தது.
அதன்பின் அருளாளர்கள் பலர் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தனர்.
அந்தப்படிகள் பல சிறியதாவும் செங்குத்தாகவும் இருந்தன. இதனால் வயதானவர்களால் எளிதாக ஏற முடியாது.
தற்போது எல்லோரும் எளிதாக ஏறும் வண்ணம் உயரம் குறைந்த அளவில் அதேநேரம் அகலமாகவும் படிக்கக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் இளைபாற மலைப்பாதையில் 5 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மண்டபங்களில் முருகன் சிலையோடு சித்தர்கள் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன.
- தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
- அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.
அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது.
இந்த மலையில் சிறப்புகள் சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது.
தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
முருகப்பெருமானின் அருளோடு மூலிகைகள் நிறைந்தும் சுனைகள் சூழ்ந்தும் காணப்படும் இம்மலையில் எப்போதும் சித்தர்களின் அதிர்வலைகள் இருந்து கொண்டே இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்தால் வேண்டியவை நிறைவேறுகிறது.
இக்கோவில் தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
- இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
- அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர். அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.
எல்லா முருகன் மலைக் கோவிலிலும் அடிவாரத்தில் விநாயகர் இருப்பார்.
அதேபோல் தோரண மலையின் அடிவாரத்திலும் விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.
ஆனால் மற்ற கோவில்களில் எல்லாம் பெயரளவுக்குத்தான் விநாயகர் சன்னதி இருக்கும்.
அதாவது முருகனை வழிபட செல்லும்முன் அவரது அண்ணனும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த விநாயகரை அமைத்து இருப்பார்கள்.
ஆனால் தோரணமலையை பொறுத்தவரை மலைமேல் உள்ள முருகன் சன்னதிக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர். அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார்.
அந்த காலத்தில் இங்கும் விநாயகர் சன்னதி மட்டுமே இருந்துள்ளது. அதன்பின் சன்னதி முன்பு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
சன்னதியை சுற்றி பிரகாரம் சிறப்புற அமைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சன்னதிக்கு தென்கிழக்கு பகுதியில் மடப்பள்ளி கட்டப்பட்டு உள்ளது.
அந்த விநாயகர் சன்னதியில்தான் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், நடராஜர் உற்சவர்கள் உள்ளனர்.
- மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.
- இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.
எழில் கொஞ்சும் இயற்கைகளை தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பொதிகை மலை உள்ளது.
அதற்கு வடக்கே, பொங்கி விழும் அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம்.
இவை இரண்டுக்கும் நடுவே அமந்துள்ளது தான் தோரணமலை.
மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.
இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.
யானைக்கு வாரணம் என்றும் பெயர் உண்டு. எனவே இதனை வாரணமலை என்று அழைத்தனர்.
அதுவே தோரணமலை என்று மறுவி அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த மலையில் சுனைகளும், மூலிகைகளும் தோரணங்களாக விளங்கு அழகு சேர்க்கின்றன.
அந்த வகையிலும் தோரணமலை என்ற பெயர் மிக பொருத்தமாக அமைந்துள்ளது.
- யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
- தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
- பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தோரணமலையில் விநாயகர் சன்னதி நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். மாலையில் 5 மணி வரை திறந்திருக்கும்.
மலை மீதுள்ள சன்னதி காலை 6 மணி திறந்து மாலை 4 மணி திறந்து இருக்கும். ஆனால் தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற முக்கிய நாட்களில் இரவு நேரத்திலும் பக்தர்கள் மலை ஏறலாம்.
தினமும் காலையில் விநாயகருக்கும் முருகப்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும்.
பகலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கார்த்திகை நட்சத்திரம் போன்ற முக்கியமான நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தமிழ்மாத கடைசி வெள்ளி அன்று பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
செவ்வாய், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் காலங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் செல்கிறார்கள்.
தைப்பூசம், வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தன்று பக்தர்கள் அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வருகிறார்கள். அன்று முருகப்பெருமானின் திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெறும்.
தென்மாவட்டங்களில் சித்திரை முதல் நாளும், ஐப்பசி முதல்நாளும் புனித நாட்களாக கொண்டாடப்படுகிறது.
அந்த காலத்தில் இந்த இரு நாட்களும் பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற தலங்களுக்கு பக்தர்கள் செல்வார்கள்.
தற்போது இந்த நாட்களில் தோரணமலைக்கும் திரளாக வருகிறார்கள்.
தமிழ் மாத கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகலபூஜை நடத்தப்படுகிறது.
இதற்காக மலைமீதுள்ள சுனையில் இருந்து பக்தர்கள் கலசங்களில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள்.
கோவிலுக்கு வடபுறம் உள்ள மேடையில் முருகன், வள்ளி, தெய்வானையை எழுந்தருளச் செய்து உற்சவர்களுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அதன்பின் விவசாயம் செழிக்க ஸ்ரீவர்ணகல பூஜை நடத்தப்படுகிறது.
திருக்கல்யாணமும் இங்குதான் நடைபெறும்.
- தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
- தமிழ் மருத்துவம் என்பது இந்த கால மருத்துவப் படிப்பை போல் கிடையாது.
கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா?
அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி.
கும்பமுனி, அகத்தீசர் என்று அழைக்கப்படும் அகத்தியர் ஆவார்.
இவர் வட திசையில் இருந்து தென்திசை வந்து அமர்ந்தபோது ஆதி மொழி என்னும் மூல முதல் மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தவர் தட்சிணாமூர்த்தி என்ற சிவபெருமானே ஆவார்.
பின் பொதிகை மலையில் அகத்தியர் ஞான நிலையில் இருந்தபோது தமிழ் கடவுளாகிய குமரக்கடவுள் எனும் முருகப்பெருமானிடமும் தமிழை கற்று பிரணவத்தின் பொருள் அறிந்து அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை இயன்றினார்.
பின் அதனை பின்பற்றிதான் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கண நூல் தந்தார்.
தற்போது அகத்தியம் கண்ணில் படாமல் போனாலும் அவரது சீடர் தொல்காப்பியரின் படைப்பே தமிழ் இலக்கணத்துக்கு இன்றும் பாடமாக விளங்குகிறது.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
தமிழ் மருத்துவம் என்பது இந்த கால மருத்துவப் படிப்பை போல் கிடையாது.
இந்த மண் முதல் விண் வரை உலக இயகத்தின் அனைத்து தத்துவங்கயையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் ஒருவர் முழு சித்த மருத்துவ பண்டிதன் ஆக முடியும்.
இதற்காக அகத்தியர் ஒரு லட்சத்துக்கும் மேலான கிரகந்தங்களை வகுத்து தந்துள்ளார்.
அவர், தான் ஆய்ந்து அறிந்த மருத்துவ குறிப்புகளையும் மூலிகை குறிப்புகளையும் பாசான குறிப்புகளையும் கொண்டு "அகத்திய வைத்திய சேகரம்" என்ற நூலை நமக்குத் தந்து அருளியுள்ளார்.
- அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.
- அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.
நாம் பாடம் படிக்க பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் நாடுவது இன்றைய காலமுறையாக உள்ளது.
இதற்கு முந்தைய காலத்தில் திண்ணையிலும் மர நிழல்களிலும் மண்ணிலும் அமர்ந்து பாடம் கற்றார்கள்.
அதற்கும் முற்பட்ட காலங்களில் குருகுலம்தான் பள்ளிக்கூடங்களாகவும் கல்விச்சாலைகளாகவும் திகழ்ந்தன.
அக்காலக் கட்டங்களில் அதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின.
அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.
இதைக் கேள்விப்படும்போதே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேதான் இந்த தோரணமலை என்ற தோரணகிரி உள்ளது.
இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக்கோவிலில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.
இறையருளும் மூலிகை வாசமும் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலக் கட்டத்தில் பல பட்டங்கள் வழங்கும் மருத்துவ பாடசாலையாகவும் ஆராய்ச்சி மையமாகவும் விளங்கியது என்கிறார் சித்தர்கள் மற்றும் சித்தமருத்துவ ஆராய்ச்சியாளர் எஸ்.கே.டி.பி.காமராஜ் அவர்கள்.
- ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
- குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
2. குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும்.
4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும்.
5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும்.
6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும்.
7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும்.
8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும்.
9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
- அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.
- நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.
அகத்தியரிடம் பேரன்பு கொண்ட சீடரான தேரைய சித்தரை வணங்க அகப் புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும்.
அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.
முதலில் தியான செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும்.
1. குரு மெச்சிய சீடரே போற்றி!
2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூசிப்பவரே போற்றி!
4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தை போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!
அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக "ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!" என்று 108 முறை கூறி வழிபட வேண்டும்.
நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும்.
இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது.






