சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி 2012, 2015-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கலானது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் விளக்கமளித்தார். அப்போது, அவர் கூறுகையில், சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களை பரிசீலித்து சபை நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.