ஓணம் பண்டிகை இன்று கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக கருதப்படும் என்றார்.