search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பேஸ்புக் மூலம் செக்ஸ் விருந்துக்கு நண்பனிடம் இளம்பெண் கேட்ட கல்லூரி மாணவன்
    X

    பேஸ்புக் மூலம் செக்ஸ் விருந்துக்கு நண்பனிடம் இளம்பெண் கேட்ட கல்லூரி மாணவன்

    • கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தை சேர்ந்தவர் எம்.எஸ்.சி. படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் (வயது23). இவர் தனது செல்போன் காணாமல் போய்விட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் கீர்த்தி இது தொடர்பாக விசாரணை நடத்தி மாணவனின் செல்போனை பயன்படுத்திய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் செல்போன் எவ்வாறு காணாமல் போனது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. எம்.எஸ்.சி. படித்து வரும் மாணவர் சமூக வலைதள மூலம் பலருக்கு நண்பர் ஆகி உள்ளார். லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் படித்து வரும் வில்லியனூர் ஜி.என்.பாளையத்தைச் சேர்ந்த சஞ்சய்குமாருக்கு (22) பேஸ்புக் மூலம் நண்பர் ஆகி உள்ளார். ஒரு நாள் கல்லூரி மாணவரும், சஞ்சய் குமாரும் சாட் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது கல்லூரி மாணவர் தனது ஆசைக்காக செக்ஸ் விருந்துக்கு அழகிய பெண் வேண்டுமென கேட்டுள்ளார். சஞ்சய் குமாரும் பெண்ணை அழைத்து வருவதாக கூறி திருக்காஞ்சி ரோடு ஒதியம்பட்டு அருகே உள்ள ஒரு காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவரை, சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர் பாலா என்ற சரவணன் (23) இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.

    அவரிடம் இருந்து ரூ. 8500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானாமாகிவிடும் என்று கருதிய கல்லூரி மாணவர் செல்போன் மட்டும் கிடைத்தால் போதும் என சைபர் கிரைம் போலீசில் செல்போன் தொலைந்து விட்டதாக புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பயன்படுத்திய நபரை பிடித்தனர். அப்போது சஞ்சய்குமாரும், பாலா என்ற சரவணனும் ஓ.எல்.எக்ஸ்-இல் செல்போனை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் வேலயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு விசாரணை நடத்தி சஞ்சய்குமார், பாலா 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×