search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சிறுமி படுகொலை விவகாரம்: அமைதி பேரணி, பந்த் நடத்த புதுச்சேரி இந்தியா கூட்டணி முடிவு
    X

    சிறுமி படுகொலை விவகாரம்: அமைதி பேரணி, பந்த் நடத்த புதுச்சேரி இந்தியா கூட்டணி முடிவு

    • புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
    • இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    அந்த வரிசையில் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை (மார்ச் 7) நடைபெறும் அமைதி பேரணியில் கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைதி பேரணி நாளை மாலை 4 மணிக்கு துவங்க இருக்கிறது.

    நாளை மறுதினம் (மார்ச் 8) முழுக்க பந்த் அமைதியான முறையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி மட்டுமின்றி நாளை மறுநாள் அ.தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×