search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திரு.பட்டினத்தில் மீனவர் மீது தாக்குதல்4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    திரு.பட்டினத்தில் மீனவர் மீது தாக்குதல்4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    • 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
    • இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.

    பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.

    அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×