search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மது குடிக்கும் போது தகராறு: பீர்பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்
    X

    மது குடிக்கும் போது தகராறு: பீர்பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்

    • ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மதகடி தோமாஸ் அருள் திடலைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24). இவர் கும்ப கோணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், 2-ம் பரிசு பெற்ற மகிழ்ச்சியில், நண்பர்கள் டேவிட், சூரியா, அலெக்ஸ், ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. அப்போது, இந்த கபடிக்குழு வெற்றிபெற நான்தான் காரணம் என ரமேஷ் என்பவர் கூறியதாக வும், அதற்கு, பிரசாந்த் ஏன் சூரியா நல்ல விளையாட வில்லையா என கேட்டதாக வும் இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பீர்பாட்டி லால் பிரசாந்த் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காயம் ஏற்பட்ட பிரசாந்த் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு பிரசாந்த் நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    அதேபோல், ரமேஷ் நிரவி போலீசில் கொடுத்த மற்றொரு புகாரில், பிரசாந்த் இந்த கபடிகுழு வெற்றி பெற நான்தான் காரணம் என கூறியதால் எங்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குசென்றேன். வீட்டின் அருகே சென்ற போது, மேற்படி பிரசாந்த் தனது நண்பர்கள் அஜித், சிவக்குமார், கார்த்திக் ஆகி யோருடன் என்னை வழி மறித்து, என்னை தாக்கி னார்கள். இதில் காயம் அடைந்த நான் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்க பட்டேன். மேலும் என் மீது தாக்குதல் நடத்திய மேற்கண்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×