என் மலர்tooltip icon

    வட கொரியா

    • தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.
    • அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டல் விடுத்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய 2 ஏவுகணை சோதனை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று வடகொரியா கிழக்கு கடற்கரை நகரமான சின்போவில் இருந்து நீர் மூழ்கி கப்பல் மூலம் 2 ஏவுகணைகளை வீசியதாக அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணைகள் வடகொரியா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் குறிப்பிட்ட இலக்கினை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோதனையின் போது சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

    வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக தென்கொரியாவும், அமெரிக்க ராணுவ கூட்டுப் படையினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று காலை அவர்கள் மிகப்பெரிய அளவிலான கூட்டு பயிற்சி மேற்கொள்ள இருந்தனர்.

    இந்த பயிற்சி தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு வடகொரியா நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.
    • ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.

    வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும் வடகொரியாவின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாம்போநகர் என்ற பகுதியில் கடலை நோக்கி குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.

    • அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது.
    • தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவை வட கொரியா எச்சரித்துள்ளது.

    சியோல்:

    அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து, மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த வாரம் தொடங்கும் இந்த போர் பயிற்சிக்கு முன்னோட்டமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் நேற்று முன்தினம் கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்களை பறக்கவிட்டு பயிற்சியில் ஈடுபட்டன.

    இதனிடையே கூட்டுப்போர் பயிற்சியின்போது வடகொரியா பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தினால் அவற்றை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு வேளை தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவை வட கொரியா எச்சரித்துள்ளது.

    இது குறித்து வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகொரியா தனது ஆயுத சோதனைகளுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க ராணுவ நடவடிக்கையையும் போருக்கான அறிவிப்பாக பார்க்கும். பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு சொந்தமானது அல்ல. இருநாடுகளும் தங்களது கூட்டுப்பயிற்சியை விரிவுப்படுத்த நினைத்தால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்க வடகொரியா தயாராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    • தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
    • கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.

    சியோல்:

    வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.

    தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் வடகொரியாவில் தற்போது கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. சிலர் பசி, பட்டினியால் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

    ஆனால் இதனை அந்த நாட்டு அரசு மறுத்து உள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டினார். இதில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், விவசாய முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டது. விவசாயம் குறித்து விவாதிக்க மட்டுமே கட்சியின் கூட்டம் கூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதில் பேசிய அதிபர் கிம் ஜாங் நாட்டில் உணவு உற்பத்தி இலக்கை அடைவதே முதன்மையானது என்றும் மார்க்கெட்டில் உணவு பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் கூறினார்.

    • வருடாந்திர கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.
    • கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

    சியோல் :

    கிழக்கு ஆசிய நாடான வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை விரும்பாத அமெரிக்கா, பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வருகிறது.

    ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறி தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது.

    அதிலும் அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை அவ்வப்போது சோதித்து அமெரிக்காவை அதிரவைத்து வருகிறது.

    இந்த சூழலில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக மேற்கொள்ளப்படும் வருடாந்திர கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன.

    இதனால் கடும் கோபமடைந்த வடகொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கினால் இருநாடுகளும் முன்னொப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடியை சந்திக்கும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

    அதோடு நிறுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ராணுவம் கணினி மயமாக்கப்பட்ட கூட்டுப்பயிற்சியை நேற்று வாஷிங்டனில் தொடங்கின. இதற்கு பதிலடி தரும் விதமாக வடகொரியா நேற்று ஒரே நாளில் 4 தொலைதூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்தது அதிரவைத்தது.

    இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் வடக்கு பகுதியில் ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரில் இருந்து 'ஹவாசல்-2' ஏவுகணைகள் 4, கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடலை நோக்கி ஏவப்பட்டன. இந்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பறந்து, 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கின" என கூறப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், "இன்றைய ஏவுகணை சோதனைகள் வடகொரியாவின் அணு ஆயுத படைகளின் போர்த் தயார்நிலையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளன. மேலும் அவை எதிரி படைகளுக்கு எதிரான கொடிய அணுசக்தி எதிர்த் தாக்குதல் திறன்களை வலுப்படுத்துகின்றன" எனவும் அதில் கூறப்பட்டள்ளது.

    வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் அமெரிக்காவுடன் இணைந்து இதுப்பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    அதேசமயம் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    • வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    சியோல்:

    வடகொரியா- தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது.

    தன் எதிரி நாடாக கருதும் தென்கொரியா மற்றும் அதற்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் சமீப காலமாக வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    உலக நாடுகள் எதிர்ப்புகளை மீறி வடகொரியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று அந்த நாடு அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது.வடகொரியா ஹம்யாங் மாகாணத்தில் உள்ள கிம் சாக் நகரத்தில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிபாய்ந்து சென்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கினை தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் எதுவும் தெரிய வில்லை.

    தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு படையினர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொரியா தீபகற்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    • தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
    • வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சியோல்:

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உத்தரவின் பேரில் ஐ.சி.பி.எம். வகையை சேர்ந்த ஹவாகாய்-15 என்ற ஏவுகணையை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி விண்ணில் ஏவி சோதனை நடத்தியது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 5,770 கிலோமீட்டர் உயரத்தில் 990 கி.மீட்டர் தொலைவில் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கியது. தனது அணு ஆயுத சோதனைக்கு இது மேலும் வலு சேர்ப்பதாக அமைந்ததாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தென் கொரியா கூறி உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரை பகுதியில் விழுந்தது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 48 மணி நேரங்களில் அடுத்தடுத்து வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது.

    பியாங்யாங்:

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது.

    இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக அறிவித்தன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. போர் பயிற்சியை தொடங்கினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.

    அந்த ஏவுகணையை கடலை நோக்கி வடகொரியா ஏவியது. இதுதொடர்பாக தென் கொரியா ராணுவம் கூறும்போது, அதிகாலையில் ஏவப்பட்ட ஏவுகணை 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்தது என்றும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றது என்றும் தெரிவித்தது.

    இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் கடல் பகுதியில் விழுந்துள்ளது. அந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக் கைடா மாகாணத்தின் மேற்கு ஓஷிமா தீவு அருகே விழுந்ததாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்தார்.

    இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா கூறும்போது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையானது வலிமையான எதிர் தாக்குதலுக்கு தயாராக இருக்கும் வடகொரியாவின் உண்மையான போர் திறனை காட்டுகிறது.

    இந்த சோதனை, எதிரி படைகள் மீது அபாயகரமான அணு சக்தி எதிர்த்தாக்குதல் திறனுக்கு உண்மையான ஆதாரம் என்று தெரிவித்தது.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • இதில் அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் கலந்து கொண்டார்.

    பியாங்யாங்:

    வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

    இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி ஆட்டிப்படைத்தது.

    பெரும்பாலான உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என கூறி வந்தது.

    ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை வடகொரியா உறுதி செய்ததது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளானதாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும் கொரோனாவை வென்றதாக ஆகஸ்டு மாதமே வடகொரியா அறிவித்தது.

    இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று பரவல் எழுச்சி பெறும் அபாயம் எழுந்துள்ளது.

    இதனையடுத்து, பியாங்யாங் முழுவதும் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி பியாங்யாங்கில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளன.

    மேலும் ஒவ்வொரு நாளும் பல முறை உடல் வெப்பநிலையை பரிசோதித்து, அதன் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஊரடங்கு தொடர்பான அரசின் உத்தரவில் கொரோனா பரவல் குறித்து குறிப்பிடவில்லை என்றபோதும், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு கொரோனாவின் தாக்கமே காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

    இதைத்தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    இந்த சூழலில் வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பியாங்யாங்கை தொடர்ந்து, வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
    • கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது.

    சியோல்:

    அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் மேற் கொண்டு வரும் கூட்டு ராணுவ பயிற்சி தங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என்று வடகொரியா கூறி வருகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்ய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ள போதிலும் அந்த சோதனைகளை அந்நாடு தொடர்ந்து செய்து வருகிறது.

    கடந்த ஆண்டு மட்டும் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அந்நாடு நேற்று வடகொரியா தலைநகர் பியோங்கி யாங்குக்கு தெற்கே உள்ள தீவில் இருந்து 3 ஏவுகணைகளை கிழக்குநோக்கி வீசியது.

    இந்த ஏவுகணைகள் கொரியா தீவகற்பத்துக்கும். ஜப்பானுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விழுந்தது. இந்த சூழ்நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி உள்ளது.

    இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2. 50 மணி அளவில் பியோங்கி யாங்கில் இருந்து கிழக்கு கடல் பகுதியை நோக்கி குறுகிய தூர பாலிடிக்ஸ் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியதாக தென்கொரியா கூட்டு படையினர் தெரிவித்து உள்ளனர். இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் தூரத்துக்கு சீறிப்பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக தென் கொரியா கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வடகொரியா 4 ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங்அன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடகொரியா அதிகரிக்க உள்ளது. அமெரிக்கா மற்றும் பிற பகைமை நாடுகளின் ஆபத்தான போக்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கிலும் நாட்டில் ராணுவ பலம் இரு மடங்கு ஆக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×