என் மலர்
வழிபாடு

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி 190-வது ஆண்டு அவதார திருநாள் ஊர்வலம்
மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி 190-வது ஆண்டு அவதார திருநாள் ஊர்வலம்
ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.
மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 190-வது ஆண்டு அவதார திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு சென்னை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.
காலை 5.30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், லதாநாராயணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.
ஊர்வலம் நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்றது. முன்னதாக ஊர்வலம் செல்லும் வழியில் டி. எஸ். எஸ். நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர். பி. மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று உணவு வழங்கினர். ஊர்வலம் செல்லும் வழியெங்கும் உபய தாரர்கள் நீர், மோர் வழங்கினர்.பகல் 12 மணியளவில் ஊர்வலம் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.
இதை முன்னிட்டு சென்னை, சென்னை புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.
காலை 5.30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், லதாநாராயணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் திருநாமக் கொடி ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி பாதயாத் திரையாக நடந்து சென்றனர்.
ஊர்வலம் நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்றது. முன்னதாக ஊர்வலம் செல்லும் வழியில் டி. எஸ். எஸ். நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர். பி. மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று உணவு வழங்கினர். ஊர்வலம் செல்லும் வழியெங்கும் உபய தாரர்கள் நீர், மோர் வழங்கினர்.பகல் 12 மணியளவில் ஊர்வலம் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது.
Next Story






