search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய தீர்த்த கிணறுகளுக்கான சிறப்பு பூஜை இன்று நடந்தது.
    X
    புதிய தீர்த்த கிணறுகளுக்கான சிறப்பு பூஜை இன்று நடந்தது.

    ராமேசுவரம் கோவிலில் அமைக்கப்பட்ட புதிய தீர்த்த கிணறுகளுக்கு சிறப்பு பூஜை

    ராமேசுவரம் கோவில் புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை பூஜைகள் நடந்தன. நாளை முதல் இந்த தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க தலங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம் பிக்கை.

    இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் 22 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. இங்கு நீராடினால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த புனித தீர்த்தங்களில் 6 தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பாதையில் இருந்தது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற் பட்டது.

    இதையடுத்து நெருக்கடியான இடத்தில் உள்ள 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சவுகரியமான இடத்தில் 6 புனித தீர்த்த கிணறுகளை மாற்ற உத்தரவிட்டது.

    கடந்த சில மாதங்களாக கோவிலின் வடக்கு பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டும் பணி நடந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

    புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த கிணறுகளுக்கு மகாலட்சுமி, சரஸ்வதி, கங்கா, யமுனா, சங்கு, சக்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

    புதிய தீர்த்தங்களுக்கு இன்று காலை கோவிலில் கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அம்பாள்-சுவாமி புனித தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் கோவில் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (28-ந்தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் பக்தர்கள் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×