search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா விராட் கோலி
    X
    ரோகித் சர்மா விராட் கோலி

    ரோகித் சர்மாதான் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: விராட் கோலி புகழாரம்

    ரோகித் சர்மாதான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
    இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 314 ரன்கள் குவித்தது. தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா 104 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவின் நான்காவது சதம் இதுவாகும். சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவை இந்திய அணி கேப்டன் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக நான் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர்தான் தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர். அவர் சிறப்பாக விளையாடும்போதெல்லாம், இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கிச் செல்லும்.

    ரோகித் சர்மா விராட் கோலி

    அவர் விளையாடுவதை பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்த உலகக்கோப்பையை அவரது வாழ்க்கையாக எடுத்துக் கொண்டு விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை பார்க்க ஜாலியாக உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×