என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருங்கால நம்பர்-4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம்: யுவராஜ் சிங்
Byமாலை மலர்2 July 2019 2:30 PM GMT (Updated: 2 July 2019 2:30 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணிக்கான வருங்கால நம்பர்- 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் 4-வது இடத்திற்கு நிலையான பேட்ஸ்மேனை இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ளது. அம்பதி ராயுடுவை அந்த இடத்திற்கு தயார் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரின்போது மோசமாக விளையாடியதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஒன்றிரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை களம் இறக்கினர். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் களம் இறக்கியது. அதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயத்தால் விலகியதால் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் வருங்காலத்திற்கான இந்திய அணியின் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காலத்திற்கான நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பந்தை சரியான வகையில் உருவாக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்றிரண்டு போட்டிகளில் விஜய் சங்கரை களம் இறக்கினர். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரையும் களம் இறக்கியது. அதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தவான் காயத்தால் விலகியதால் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்தில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 41 பந்தில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் வருங்காலத்திற்கான இந்திய அணியின் நான்காவது இடத்தில் களம் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டோம் என யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வங்காலத்திற்கான நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறேன். ரிஷப் பந்தை சரியான வகையில் உருவாக்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
I think finally we have found our no 4 batsman for the future ! Let’s groom him properly yeah ! @RishabPant777
— yuvraj singh (@YUVSTRONG12) July 2, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X