என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்
Byமாலை மலர்25 Jun 2019 10:36 AM GMT (Updated: 25 Jun 2019 10:36 AM GMT)
பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மர், மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான நெய்மர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 200 மில்லியன் யூரோவிற்கு மேல் விலைகொடுத்து அவரை பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியது.
ஆனால் பார்சிலோனாவில் விளையாடியபோது கிடைத்த புகழ், பிஎஸ்ஜி அணியில் விளையாடும்போது அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், பிஎஸ்ஜி அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார். அது தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப நெய்மர் விரும்புகிறார் என்ற பேச்சு அடிபட்டது. இதை பிஎஸ்ஜி அணி உரிமையாளரும் உறுதிப்படுத்தினார்.
தற்போது நெய்மர் ஆண்டுக்கு சுமார் 283 கோடி ரூபாய் வருமானமாக பெறுகிறார். பார்சிலோனா அணிக்கு மீண்டும் செல்வதற்காக சுமார் 100 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்து 185 ரூபாய் தந்தால் போதும் என்கிறாராம். இதனால் நெய்மர் பார்சிலோனா அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிஎஸ்ஜி அணிக்கு செல்லும்போது பார்சிலோனா 23 மில்லியன் பவுண்டு போனஸ் ஆக தரவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பணத்தையும் விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளார். மீண்டும் பார்சிலோனா அணிக்கு நெய்மர் வந்தால் ஐந்தாண்டுக்கு ஒப்பந்தம் போட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பார்சிலோனாவில் விளையாடியபோது கிடைத்த புகழ், பிஎஸ்ஜி அணியில் விளையாடும்போது அவருக்கு கிடைக்கவில்லை. மேலும், பிஎஸ்ஜி அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார். அது தோல்வியில் முடிந்தது. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப நெய்மர் விரும்புகிறார் என்ற பேச்சு அடிபட்டது. இதை பிஎஸ்ஜி அணி உரிமையாளரும் உறுதிப்படுத்தினார்.
தற்போது நெய்மர் ஆண்டுக்கு சுமார் 283 கோடி ரூபாய் வருமானமாக பெறுகிறார். பார்சிலோனா அணிக்கு மீண்டும் செல்வதற்காக சுமார் 100 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்து 185 ரூபாய் தந்தால் போதும் என்கிறாராம். இதனால் நெய்மர் பார்சிலோனா அணிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிஎஸ்ஜி அணிக்கு செல்லும்போது பார்சிலோனா 23 மில்லியன் பவுண்டு போனஸ் ஆக தரவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த பணத்தையும் விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளார். மீண்டும் பார்சிலோனா அணிக்கு நெய்மர் வந்தால் ஐந்தாண்டுக்கு ஒப்பந்தம் போட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X