என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?: நிருபர் கேள்விக்கு ரோகித் சர்மாவின் நறுக் பதில்
Byமாலை மலர்17 Jun 2019 10:29 AM GMT (Updated: 17 Jun 2019 10:29 AM GMT)
பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா, பாகிஸ்தான் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நறுக்கென பதில் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மாவின் (140 ரன்) அதிரடி ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கனே சேர்த்தது.
டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
போட்டி முடிந்த பின்னர் இந்திய துணைக் கேப்டனான ரோகித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ரோகித் சர்மாவிடம், ‘‘நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். இதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாக வருகிறார்கள். அவர்கள் விமர்சனத்தில் இருந்து வெளியே வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நீங்கள் ஆலோசனை கூறுவதாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?’’ என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா ‘‘நான் எப்போதாவது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன்’’ என்று நறுக்கென கூறினார்.
டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
போட்டி முடிந்த பின்னர் இந்திய துணைக் கேப்டனான ரோகித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ரோகித் சர்மாவிடம், ‘‘நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். இதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாக வருகிறார்கள். அவர்கள் விமர்சனத்தில் இருந்து வெளியே வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நீங்கள் ஆலோசனை கூறுவதாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?’’ என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா ‘‘நான் எப்போதாவது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன்’’ என்று நறுக்கென கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X