என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
    • இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து பல மருத்துவ ஊழியர்கள் வெளியேறிய நிலையில், சில மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள்ன. மற்ற மருத்துவமனைகள் குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 1.7 பில்லியன் டாலர் நிதி உதவியை உக்ரைன் பெற்றுள்ளது. இந்த நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் சுகாதார மந்திரி கூறுகையில், போரின் பெரும் சுமை காரணமாக ஒவ்வொரு மாதமும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மிகவும் கடினமாகி வருகிறது. 1.7 பில்லியன் டாலர் என்பது மற்றொரு நிதி உதவி மட்டுமல்ல, இது ஒரு முதலீடாகும். இது எங்களை வெற்றிக்கு ஒரு படி நெருங்க வைக்கிறது என தெரிவித்தார்.

    • உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன.
    • டொனெட்ஸ்க் நகரில் ரஷிய படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்தது.

    கீவ்:

    உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    • ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் நீக்கம்.
    • தூதர்கள் நீக்கம் தொடர்பான காரணங்களை உக்ரைன் அதிபர் தெரிவிக்கவில்லை.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் உக்ரைன் அதிபர் மாளிகை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில் அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.
    • பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி தலிதா டோவாலே போரில் பங்கேற்றார்.

    துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.

    இதில் தலிதா டோவாலே பலியானார். இவர் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். தற்போது உக்ரைன் மீதான போர் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 4 மாதத்தை தாண்டியுள்ளது.
    • போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்தன.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டிற்கான (2022) உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், உக்ரைன் மீட்பு மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை என தெரிவித்தார். இந்த நிதியை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ரஷிய ராணுவம் முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து முன்னேறி வருகிறது.
    • வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாக தகவல்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் ஐந்தாவது மாதமாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. அதேசமயம், தற்காப்பு மற்றும் பதிலடி தாக்குதல்களை உக்ரைன் படைகள் மேற்கொண்டுள்ளன. ரஷியாவிடம் இருந்து ஒரு சில பகுதிகளை மீட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷிய ராணுவ தளத்தை குறிவைத்து 30 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் இவான் பெடோரோவ் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனின் தாக்குதலால் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் நேற்று மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாகவும் பெடோரோவ் கூறினார்.

    • கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது.
    • ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 5-வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷிய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. அந்த தீவை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியது.

    இந்த நிலையில் பாம்பு தீவு மீது இன்று ரஷியா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது. சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது பாஸ்பரஸ் ரக குண்டுகள் வீசப்பட்டன.

    இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறும்போது, "ரஷிய விமானப் படையின் சுகோய்-30 விமானங்கள், பாம்பு தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்தது.

    பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்ப கொண்டு செல்ல முடியவில்லை. எனவே ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷியா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் ஓடேசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

    இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.

    உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.

    ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.

    இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.

    ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

    இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.

    இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக உக்ரைன் அதிபர் தகவல்
    • அதிக கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம்  மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

    இதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனின் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    போர் தொடங்குவதற்கு முன்பு கிரெமென்சுக் நகர பகுதியில் 2,20,000 மக்கள் வசித்ததாகவும், அந்த நகரத்தை ஏவுகணைகள் தாக்கியபோது, ​​ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

    வணிக வளாகம் தீப்பற்றி எரிகிறது, மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடுகிறார்கள், பலியானவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்க இயலாது என்று ஜெலன்ஸ்கி தமது சமூக வளைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வணிக வளாகத்தில் அதிக மக்கள் கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்த ரஷிய படைகள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. 

    • உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
    • அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போர் தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது.

    தொடக்கத்தில் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா முயற்சித்து வருகிறது. குறிப்பாக டான்பாஸ் பிராந்தியத்தை முற்றிலும் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகின்றன.

    அங்குள்ள செவரோடோனெட்ஸ்க் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் சில வாரங்களாக கடும் தாக்குதல் நடத்தி வந்தன. கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.

    இந்த நிலையில் அந்நகரை ரஷிய ராணுவம் முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனை அந்நகர மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரிக் உறுதிப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, ரஷியர்களால் செவரோடோனெட்ஸ்க் நகரம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார். கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரம், ரஷிய படைகள் வசம் சென்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது.

    மேலும் கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் நகரை நாட்டின் தெற்கு பகுதியில் துண்டிக்க ரஷிய படைகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ்வில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அண்டை நாடான பெலாரசில் இருந்து உக்ரைன் மீது பெரிய அளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    வடக்கு செர்னிகிவ் பிராந்தியத்தில் உள்ள டெஸ்னா கிராமத்தை குறி வத்து 20 ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும் இதில் ராணுவ நிலையின் உள்கட்டமைப்பு சேதமடைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பெலாரஸ், ரஷியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷியாவின் போரில் பெலாரஸ் அதிகாரப்பூர்வமாக ஈடுபட்டாத நிலையில் அந்நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தபபட்டதாக உக்ரைன் புகார் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.
    • ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன.

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு பல்வேறு நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன.

    இந்நிலையில், கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷிய ஷெல் நடத்திய தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறியதாவது:- ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். காங்கிவ் பகுதியில் ரஷியா பகர்நேர ஷெல் தாக்குதலின் பயங்கரமான விளைவுகள் இதுவாகும். இதுபோன்று ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. இது பயங்கரவாதம். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள். அவை தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர்.

    இந்தப் போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

    போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

    இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷியாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால் அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும். ரஷியாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர் என தெரியவந்ததாக தெரிவித்து உள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இதுதொடர்பாக பிரதமர் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது. உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

    ×