என் மலர்
உலகம்

Trump Warning | ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் - ஈரானுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த டிரம்ப்
- ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை.
- இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ விளைவுகள் ஏற்படும்.
மத்திய கிழக்குப் போர் தீவிரமடைந்துள்ளது. போர் காரணமாக உயிரிழப்புகள், பொருட்சேதம் ஒருபக்கம் ஏற்பட்டு வருகிறது. மறுப்பக்கம் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேறாது என ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கம் தோண்டும் கப்பல்களை கொண்டு சுரங்கங்களை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கம் தோண்டுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், சுரங்கங்கள் வைத்திருப்பின் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத்-இல் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "எந்த காரணத்திற்காகவும் சுங்கங்கள் அமைக்கப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால், ஈரானுக்கு ராணுவ விளைவுகள் இதற்கு முன் கண்டிராத அளவில் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.






