என் மலர்tooltip icon

    உலகம்

    சிலையாக நின்ற மாணவன்- காரணம் என்ன? வைரலாகும் வீடியோ
    X

    சிலையாக நின்ற மாணவன்- காரணம் என்ன? வைரலாகும் வீடியோ

    • வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
    • கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது.

    தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பண்பாடு.

    தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்படி ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்து கொண்டிருந்த மாணவன், நடந்தபடியே சிலைபோல அசையாமல் நின்றான்.

    படத்தில் பார்க்கும்போது அது ஓவியம்போல தெரிந்தாலும், வீடியோவாக காணும்போதுதான் மேல் தளத்தில் மற்ற மாணவர்கள் நிற்பதும், கீழ் தளத்தில் அந்த மாணவர் தனியே நடக்கும் சிலையாக தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதும் வினோத காட்சியாக பதிவாகி உள்ளதை உணர முடியும். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.

    கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×