என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • நியூசிலாந்து 102 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    போலந்து பார்க்:

    மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து, இலங்கை அணிகள் பலப்பரிட்சை நடத்தின.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.

    163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

    இறுதியில், இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 116 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 113 ரன்கள் எடுத்து தோற்றது.

    கியூபெர்தா:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்ஸ் 30 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் நிடா டார் 27 ரன், கேப்டன் பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்களே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தததால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 124 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கியூபெர்தா:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.

    • இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாட் ஸ்கிவர் பிரண்ட் 50 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் ஷபாலி வர்மா (8), ஜெமிமா (13), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அரை சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 7 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக ஆடிய ரிச்சா கோஷ் இலக்கை எட்ட போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே சேர்க்க முடிந்தது. ரிச்சா கோஷ் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாட் ஸ்கிவர் பிரண்ட் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • அதிரடியாக ஆடிய ஸ்கிவர் புரூண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார்.
    • எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சோபியா மற்றும் வியாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோபியா 10 ரன்னிலும், வியாட் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தகேப்சி 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். முதல் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 29 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இதையடுத்து களம் புகுந்த கேப்டன் ஹெதர் நைட் மற்றும் நாட ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய ஸ்கிவர் பிரண்ட் அரை சதம் அடித்த நிலையில் அவுட் ஆனார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த ஹெதர் நைட் 28 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

    இறுதியில் எமி ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேத்தரின் அடுத்த பந்திலேயே ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    • முதலில் ஆடிய அயர்லாந்து 137 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற்றது.

    கேப் டவுன்:

    8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 61 ரன்கள் எடுத்தார். கேபி லெவிஸ் 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேத்யூஸ் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலிய அணி, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹர்ஷிதா 34 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 4 விக்கெட்டுகளும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த ஹீலி 54 ரன்களும், பெர்த் மூனே 56 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் கிட்டத்தட்ட அரையிறுதியை எட்டியது.

    ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்து. இந்த போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது. 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது.
    • விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    கேப் டவுன்:

    தென்ஆப்பிரிகாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    கனமழை, வெள்ளத்தால் 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை, வெள்ளத்தில் அந்த மாகாணங்களில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிம்போபோ மாகாணத்தின் வெம்பே நகரில் ஆற்றின் மேல் கட்டுப்பட்டுள்ள மேம்பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் கவச வேன் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பாலத்தில் தறிக்கெட்டு ஓடியது. பின்னர் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பஸ்சுடன் வேன் நேருக்கு நேர் மோதியது.

    இதில் நிலைதடுமாறிய பஸ் பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    அவர்கள் ராட்சத கிரேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றுக்குள் விழுந்த பஸ்சை வெளியே எடுத்தனர். தொடர்ந்து பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் மற்றும் ஆற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

    எனினும் இந்த கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    மேலும் பஸ் ஆற்றில் விழுந்ததில் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி அவர்களை தேடி வருகின்றனர்.

    விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் கனமழை காரணமாக மேம்பாலம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் கூறப்படுகிறது.

    இதனிடையே தென்ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதை தொடர்ந்து அங்கு நாடு தழுவிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களும், ஷபாலி வர்மா 28 ரன்களும் எடுத்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. கேப்டன் கவுர் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிச்சா கோஷ் உடன், தேவிகா இணைய, இந்தியா 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    11 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்ததால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    • ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்.
    • இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ராகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப் டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

    கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.

    இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 107 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 111 ரன்கள் எடுத்து வென்றது.

    கிபெர்கா:

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. கேப்டன் மெக் லேனிங் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மெக் லேனிங் 48 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 132 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பார்ல்:

    8-வது பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    பார்ல் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டைரன் 40 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து அணி சார்பில் ஈடன் கார்சன், தஹுஹு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இறுதியில், நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில அபாரமாக வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய அயர்லாந்து 18.2 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வென்றது.

    ×