search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் டி20 உலக கோப்பை - பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து
    X

    மகளிர் டி20 உலக கோப்பை - பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 213 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கேப் டவுன்:

    மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் சீவர் 40 பந்தில் 81 ரன்கள் விளாசினார். தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 59 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    Next Story
    ×