என் மலர்tooltip icon

    உலகம்

    எமனாக மாறிய பனி மூட்டம்: பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு
    X

    எமனாக மாறிய பனி மூட்டம்: பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு

    • பனி மூட்டத்தால் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தன.
    • கிராம சாலை வழியாக சென்றபோது லாரி விபத்துக்குள்ளானது.

    பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக டிரைவருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ளது சர்கோதா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கோட் மொமின் என்ற பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் கிராமம் வழியாக உள்ளூர் சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் 23 பேர் இருந்தனர். இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.

    பனி மூட்டத்தை சமாளித்து டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென பாலம் ஒன்று வந்தது. பனி மூட்டத்தால் டிரைவரால் அதை சரியான பார்க்க முடியவில்லை. திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் லாரியில் இருந்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள். காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.

    Next Story
    ×