என் மலர்
உலகம்

இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் நல்ல நடிகர்கள்.. '30 நாள் அனுமதி' குறித்து வெள்ளை மாளிகை | Crude oil
- நாங்கள் சொன்னதும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.
- இந்த குறுகிய கால சலுகை பொருளாதார பலனை வழங்காது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போரினால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் எல்பிஜி உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியாதே இந்த தட்டுப்பாடுகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் இந்தியாவில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு குறைந்து வரும் சூழலில் ரஷியா தனது எண்ணெய்யை கூடுதலாக கொடுக்க முன்வந்தது.
ஆனால் அண்மையில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடம் எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது.
இதற்கிடையே போர் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தியா 30 நாட்களுக்கு மட்டும் ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்தியாவின் எரிசக்தி முடிவுகளை அமெரிக்கா எடுப்பதாகவும், மோடி அரசு நாட்டின் சுதந்திரத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த சூழலில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
பேட்டியில் அவர் பேசியதாவது, ஏற்கனவே கப்பல்களில் ஏற்றி தயாராக உள்ள ரஷியாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள அமெரிக்கா தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
ஈரான் உடனான மோதலை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த குறுகிய கால சலுகை மாஸ்கோவுக்கு குறிப்பிடத்தகுந்த பொருளாதார பலனை ஒன்றும் வழங்காது.
இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகள் நல்ல நடிகர்கள் என்பதாலும், முன்பு நாங்கள் சொன்னதும் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பதாலும் அவர்களுக்கு சலுகை வழங்க அதிபர் டிரம்ப், கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் தேசிய பாதுகாப்பு அணி கூட்டாக இந்த முடிவை எடுத்தனர்" என்று தெரிவித்தார்.
முன்னாதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட், இந்தியர்கள் எங்கள் சிறந்த கூட்டாளிகள், நல்ல நடிகர்கள், முன்னர் நாங்கள் சொன்னதுபோல் ரஷிய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தினார்கள் என்பதால் இந்த சலுகையை தற்காலிகமாக வழங்க முன்வந்தாக கூறியிருந்தது சரசையான நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையும் அதிகாரபூர்வமான அதை தற்போது கூறியுள்ளது.






