என் மலர்
கேமரூன்
- அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கினார்
- எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் அதிபராக பால் பயா (Paul Biya) எட்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகில் அதிபர் பதவியில் இருக்கும் வயது முதிர்ந்த அதிபராக அவர் உள்ளார்.
கடந்த அக்டோபர் 12 அன்று அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 57.7% ஆகும்.
இந்நிலையில் பால் பயா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அனைத்தின் அரசியலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரான இசா ச்ரோமா பகாரி 35.19% வாக்குகளைப் பெற்றார்.
இந்த வெற்றியின்மூலம், பால் பயா 2032 ஆம் ஆண்டு வரை கேமரூன் அதிபராக தொடர்வார்.
கேமரூனின் முதல் அதிபரின் ராஜினாமாவைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு பால் பயா முதன்முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
பின்னர், அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலம் அதிபர் பதவிக்கால வரம்புகளை நீக்கி, தொடர்ந்து அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கேமரூனில் கடந்த வாரம் பதற்றம் நீடித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, டூவாலாவா நகரில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் இடையேயான மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
எதிர்க்கட்சியினர் வாக்குகள் திருடப்பட்டதாக கூறி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.98 அடியாக சரிந்து உள்ளது.
- அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வர த்தை காட்டிலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 72.98 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடி 597 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.74 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 12.33 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.69 அடியாகவும் உள்ளது.






