என் மலர்tooltip icon

    போட்ஸ்வானா

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு போட்ஸ்வானாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்தப் பயணத்தின் போது 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.

    காபோரோ:

    ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் காபோரோனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. கலாஹரி பாலைவனத்தில் உள்ள கான்சி நகரத்திலிருந்து 8 சிவிங்கி புலிகள் காப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

    இந்த நிகழ்வில் போட்ஸ்வானாவின் ஜனாதிபதி டூமா கிடியோன் போகோவும் கலந்துகொண்டார். இரு நாடுகளையும் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள், இடமாற்ற செயல்முறை குறித்து ஜனாதிபதிகளுக்கு விளக்கினர்.

    அப்போது பேசிய ஜனாதிபதி முர்மு, இந்தப் பரிசு போட்ஸ்வானாவின் வனவிலங்கு பாதுகாப்புக்கான வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என தெரிவித்தார்.

    அதன்பின் பேசிய போட்ஸ்வானா ஜனாதிபதி டூமா கிடியோன், இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்த சிவிங்கி புலிகள் சேரும். இது அதன் இனத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கு உதவும். இந்தியாவில் சிவிங்கி புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

    8 சிவிங்கி புலிகளும் போட்ஸ்வானாவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும். வரும் வாரங்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். இந்த சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்படும். 2022ம் ஆண்டில் இந்தியா சிவிங்கி புலிகள் இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியது.

    அப்போது 8 சிவிங்கி புலிகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. 2023ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் வந்தன.

    கடந்த 2022-ல் தொடங்கிய இந்த திட்டத்தின்படி மத்திய பிரதேசத்தின் குனோ உயிரியல் பூங்காவில் தற்போது 27 சிவிங்கி புலிகள் உள்ளன. போட்ஸ்வானாவில் இருந்து வரும் 8 சிவிங்கி புலிகள் உடன் இந்தியாவில் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    • சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
    • ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

    மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    ×