என் மலர்
உலகம்

VIDEO: தரையிறங்கும்போது துண்டான முன் சக்கரம்.. 133 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து
- ஐதராபாத் விமான நிலையத்தில் புறப்பட்டது.
- விமானம் ஓடுபாதையின் நடுவிலேயே நின்றது.
தெலுங்கானாவின் ஐதராபாத் விமான நிலையத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இருந்து தாய்லாந்தின் புக்கெட் நகர விமான நிலையத்துக்கு இன்று சென்றடைந்தது.
அங்கு ஓடுபாதையில் தரையிறங்கும் போது பலமாக மோதியதால் விமானத்தின் முன் பகுதி சக்கரம் (Nose Landing Gear) சேதமடைந்து துண்டானதலால் விபத்து ஏற்பட்டது.
இதனால் விமானம் ஓடுபாதையின் நடுவிலேயே நின்றது. விமானத்தில் இருந்த 133 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
புக்கெட் விமான நிலையத்தின் ஓடுபாதை பல மணி நேரம் மூடப்பட்டது. ஓடுபாதை முழுமையாக சோதிக்கப்பட்டு, பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பிறகே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
விமானத்தின் முன் சக்கரம் சேதமடைந்ததற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story






