என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளது- நம்பகமான ஆதாரம் இருப்பதாக ஆன்டனி பிளிங்கன் சொல்கிறார்
Byமாலை மலர்6 March 2022 2:56 PM GMT (Updated: 6 March 2022 2:56 PM GMT)
ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா போர்க்குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக சர்வதேசே நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரஷியாவின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கக் கோரி ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் சிஎன்என் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான நம்பகமான தகவல்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, ஆயுத உதவிகளையும் நிதி உதவியும் செய்து வருகிறது. அத்துடன் அமெரிக்க நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X