என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Byமாலை மலர்29 Sep 2021 1:55 AM GMT (Updated: 29 Sep 2021 1:55 AM GMT)
வடகொரியா சோதித்த ஏவுகணை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா குற்றம்சாட்டியுள்ளார்.
சியோல் :
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வந்தது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசிய பிறகு வடகொரியாவின் போக்கு மாறியது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதிப்பதை வடகொரியா நிறுத்தியது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடகொரியா அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதில் நடுத்தர, தொலைதூர மற்றும் ரெயிலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளும் அடங்கும்.
அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்தது. வடகொரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜகாங் மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் வடகொரியா சோதித்த ஏவுகணை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வந்தது.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசிய பிறகு வடகொரியாவின் போக்கு மாறியது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதிப்பதை வடகொரியா நிறுத்தியது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடகொரியா அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதில் நடுத்தர, தொலைதூர மற்றும் ரெயிலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளும் அடங்கும்.
அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்தது. வடகொரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜகாங் மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் வடகொரியா சோதித்த ஏவுகணை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X