என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி
Byமாலை மலர்1 July 2019 8:48 PM GMT (Updated: 1 July 2019 8:48 PM GMT)
சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸ்:
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக கூறி அந்த நாட்டின் மீது ஈரான் தொடர்ந்து, வான்தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா, தங்களின் ராணுவநிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதலை நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாகவும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் 6 ஏவுகணைகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு, வெற்றிக்கரமாக அழிக்கப்பட்டன. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாக கூறி அந்த நாட்டின் மீது ஈரான் தொடர்ந்து, வான்தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா, தங்களின் ராணுவநிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதலை நடத்துவதாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியானதாகவும் சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் நகரங்களில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியதில் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் 6 ஏவுகணைகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு, வெற்றிக்கரமாக அழிக்கப்பட்டன. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X