search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்காவிட்டால் மெக்சிகோ எல்லையை மூடுவேன் -  டிரம்ப் மீண்டும் மிரட்டல்
    X

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்காவிட்டால் மெக்சிகோ எல்லையை மூடுவேன் - டிரம்ப் மீண்டும் மிரட்டல்

    வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்காவிட்டால் மெக்சிகோ எல்லையை மூடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். #MexicoBorderWall #DonaldTrump

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார். மெக்சிகோ எல்லை வழியாக ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவுகின்றனர்.

    அவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.

    எனவே மெக்சிகோ எல்லையை மூடப் போவதாக மிரட்டல் விடுத்தார். இருந்தும் அந்நாடு பணியவில்லை. இந்த நிலையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

     


     

    இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா, மற்றும் எல்சால்வேடர் நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக ஊடுருவு கின்றனர்.

    பல ஆண்டுகளாக எங்கள் செல்வத்தை அவர்கள் எடுத்து செல்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மோசமான சட்டங்கள் உள்ளன.

    எனவே, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுத்து நிறுத்தும்படி மெக்சி கோவிடம் உதவி கோரினோம். ஆனால் அதை மெக்சிகோ செய்யவில்லை. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    எனவே மெக்சிகோ எல்லையை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த கருத்தை மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மானிவில் லோபெஷ் ஓபராய் மறுத்துள்ளார். இதன்மீது சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை உதவி புரிந்து வருகிறோம் என்று அவர் கூறினார். #MexicoBorderWall #DonaldTrump

    Next Story
    ×