என் மலர்
செய்திகள்

X
மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலையில் இருவருக்கு மரண தண்டனை
By
மாலை மலர்17 Feb 2019 4:33 AM IST (Updated: 17 Feb 2019 4:33 AM IST)

மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கோ னி கொலை வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். #Myanmar #DeathPenalty
யாங்கோன்:
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேர் மீதான வழக்கு யாங்கோன் வடக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அத்துடன் இந்த கொலை தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஆங் வின் சா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேர் மீதான வழக்கு யாங்கோன் வடக்கு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கி லின் மற்றும் ஆங் வின் சா ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Next Story
×
X