என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவில் ரெயில்கள் மோதல் - 4 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்8 Jan 2019 4:15 PM GMT (Updated: 8 Jan 2019 4:15 PM GMT)
தென் ஆப்பிரிக்காவில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். #SouthAfrica #TrainAccident
ஜோகனஸ்பெர்க்:
தென்ஆப்பிரிக்காவில் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில்கள்
இயக்கப்பட்டு வருகிறது.
பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் இரண்டு ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மதியம் சென்று கொண்டிருந்தன. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், முன்னால் சென்று கொண்டிருந்த ரெயில் மீது பின்னால் வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தண்டவாளத்தில் ரெயில்கள் மோதிய விபத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பயணிகள் ரெயில் விபத்து குறித்து அறிந்த தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமோபோசா. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #SouthAfrica #TrainAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X