என் மலர்
செய்திகள்

மாலியில் வெடிகுண்டு விபத்தில் 8 பேர் உடல் சிதறி பலி
மாலி நாட்டில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 7 ராணுவ வீரர்களுடன் பொதுமக்களில் ஒருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaliBombBlast
பமாகோ:
உலக நாடுகள் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான வழிமுறையை மேற்கொள்ளும் நிலையில், பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் தங்கள் வாழ்வை இழக்கின்றனர்.
இந்நிலையில், இன்று மாலி நாட்டில் ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் வெடிகுண்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் யாரேனும் காயமுற்றார்களா? பலி எண்ணிக்கை உயருமா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. #MaliBombBlast
உலக நாடுகள் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான வழிமுறையை மேற்கொள்ளும் நிலையில், பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் தங்கள் வாழ்வை இழக்கின்றனர்.
இந்நிலையில், இன்று மாலி நாட்டில் ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் வெடிகுண்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் யாரேனும் காயமுற்றார்களா? பலி எண்ணிக்கை உயருமா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. #MaliBombBlast
Next Story






