search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சடலத்துடன் சவப்பெட்டி இருப்பது தெரியாமல் வாகனத்தை திருடிச் சென்ற திருடன்
    X

    சடலத்துடன் சவப்பெட்டி இருப்பது தெரியாமல் வாகனத்தை திருடிச் சென்ற திருடன்

    இறுதி ஊர்வலத்துக்காக சடலத்துடன் சவப்பெட்டி வானத்தில் இணைக்கப்பட்டிருந்தது தெரியாமல், வாகனத்தை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் லாகியூபாகியூ பகுதியில் உள்ள மருத்துவமனையில் 80 வயது முதியவர் மரணமடையவே அவரது சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பின்னர் அருகிலுள்ள அவரது ஊருக்கு கொண்டு செல்வதற்கான வாகனத்தில் வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 40 வயதுமிக்க நபர், சாவியுடன் வாகனம் நின்றிருந்ததை பார்த்ததும், வானத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார். வாகனம் மற்றும் சடலத்தை காணததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    40 நிமிட தேடுதல் வேட்டைக்கு பின்னர் நெடுஞ்சாலையில் வானத்தை மடக்கிப்பிடித்த போலீசார் சடலத்தை மீட்டனர். வாகனத்தை திருடிய அந்த நபரையும் கைது செய்தனர். 
    Next Story
    ×