search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் இல்லை - டிரம்ப் திட்டவட்டம்
    X

    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி வாபஸ் இல்லை - டிரம்ப் திட்டவட்டம்

    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.32,500 கோடி) அளவிற்கு தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக கடந்த மாத மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 545 முக்கிய பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கூடுதல் வரியை அண்மையில் சீன பொருட்களுக்கு விதித்தார். இதற்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் ‘பாக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயத்தில் சீனா உடன்பாடு காண விரும்பினால் அதுபோல் அமெரிக்காவும் நடந்துகொள்ளும். ஆனால் இது அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்காவால் 500 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க இயலும். அதே நேரம் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை” என்றார். 
    Next Story
    ×