search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில்நுட்ப துறையில் சீன முதலீடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்
    X

    தொழில்நுட்ப துறையில் சீன முதலீடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

    அமெரிக்க தொழில்நுட்ப துறையில் சீனர்களை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. #UStariffs
    வாஷிங்டன் :

    உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களுக்கும் இதர தயாரிப்புகளுக்கான வரியை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பன்மடங்காக உயர்த்தியுள்ளது.

    சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 5 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது கூடுதல் வரி விதித்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு சீனா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனர்களை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை விலைக்கு வாங்குவதில் இருந்து குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது தடுத்து நிறுத்தும் நோக்கில் அமெரிக்க நிதி அமைச்சகம் விதிமுறைகளை வகுத்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்களை உருவாக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என கூறியுள்ள அந்நாளிதழ், மேம்பட்ட அமெரிக்க அறிவுசார் தொழில்நுட்ப பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் திட்டங்களை அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வடிவமைக்கவுள்ளன என தெரிவித்துள்ளது.

    ஆனால், இதுகுறித்த கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை, நிதித்துறை அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகம் ஆகியவை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #UStariffs
    Next Story
    ×