search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச யோகா தினம் - ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார் சுஷ்மா சுவராஜ்
    X

    சர்வதேச யோகா தினம் - ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டார் சுஷ்மா சுவராஜ்

    சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அங்குள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டார். #InternationalYogaDay2018 #SushmaSwaraj

    புருசல்ஸ்:

    ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

    இந்த பயணத்தின் முதல்கட்டமாக  திங்கட் கிழமை இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பிரான்ஸ் சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இருநாட்டு முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்தார்.

    சுஷ்மா சுவராஜ் நேற்று லக்சம்பர்க் நாட்டிற்கு சென்றடைந்தார். அந்நாட்டு பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெல்ஜியம் நாட்டுக்கு சென்றார்.

    இன்று பெல்ஜியம் நாட்டின் புருசல்ஸ் பகுதியில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ‘பருவநிலை, அமைதி, பாதுகாப்பு: செயல்பாட்டுக்கான நேரம்’ என்னும் தலைப்பில்  சிறப்புரையாற்றிய சுஷ்மா அங்குள்ள யெஹுடி மெனுஹின் அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார். 



    பிரபல மதகுருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து விட்டு 24-ம் தேதி டெல்லி திரும்புகிறார். #SushmaSwaraj #InternationalYogaDay2018
    Next Story
    ×