என் மலர்
செய்திகள்

6.0 இன்ச் 18:9 டிஸ்ப்ளே கொண்ட ஒன்பிளஸ் 5T: நவம்பரில் வெளியாகும் என தகவல்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனம் நேரடியாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின.
புதுடெல்லி:
இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஆண்டு நேரடியாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 3T போன்றே ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் 5T நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 3 வெளியாகி ஐந்து மாதம் கழித்து வெளியிடப்பட்டதை போன்று ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் வெளியாகி ஐந்து மாதங்களுக்கு பின் வெளியாகும் என கிஸ்மோசீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒன்பிளஸ் வெளியிட்ட 3T ஸ்மார்ட்போனில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட ஸனாப்டிராகன் 821 பிராசஸரிற்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் வழங்கப்பட்டது. எனினும் புதிய ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுவதால் பார்க்க சாம்சங் கேலக்ஸி S8 போன்றே காட்சியளிக்கலாம். சமீபத்தில் கசிந்த ஒப்போ F5 இதே போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 5 சாதனங்களின் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று லண்டனிலும் ஒன்பிளஸ் 5 ஸ்டாக் விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் புதிய சாதனத்தை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
புகைப்படம்: கிஸ்மோசைனா
இந்தியாவில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஆண்டு நேரடியாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் ஒன்பிளஸ் 3T போன்றே ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
புதிய ஒன்பிளஸ் 5T நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 3 வெளியாகி ஐந்து மாதம் கழித்து வெளியிடப்பட்டதை போன்று ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் வெளியாகி ஐந்து மாதங்களுக்கு பின் வெளியாகும் என கிஸ்மோசீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒன்பிளஸ் வெளியிட்ட 3T ஸ்மார்ட்போனில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்ட ஸனாப்டிராகன் 821 பிராசஸரிற்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் வழங்கப்பட்டது. எனினும் புதிய ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி 1080x2160 பிக்சல் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுவதால் பார்க்க சாம்சங் கேலக்ஸி S8 போன்றே காட்சியளிக்கலாம். சமீபத்தில் கசிந்த ஒப்போ F5 இதே போன்ற வடிவமைப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒன்பிளஸ் 5 சாதனங்களின் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று லண்டனிலும் ஒன்பிளஸ் 5 ஸ்டாக் விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் புதிய சாதனத்தை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
புகைப்படம்: கிஸ்மோசைனா
Next Story






