என் மலர்
செய்திகள்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் ப்ளிப் போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில காலமாக இணையத்தில் கசிந்து வந்த கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஸ்மார்ட்போன் காலத்தில் ப்ளிப் போன்களை தயாரித்து வருவதாக கூறப்பட்டதை சாம்சங் உண்மையாக்கியுள்ளது. SM-G1650 என்ற மாடல் பெயரில் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வந்த கேலக்ஸி ஃபோல்டர் 2 தென் கொரிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி ஃபோல்டர் 2 ப்ளிப் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. புதிய ப்ளிப் போன் வாடிக்கையாளர்களுக்கு பழைய ப்ளிப் அனுபவத்தை புதிய ஸ்மார்ட் அம்சங்களுடன் இணைந்து வழங்குகிறது. எல்டிஇ மற்றும் 3ஜி என இரண்டு மாடல்களில் புதிய ப்ளிப் போன் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 சிறப்பம்சங்கள்:
* 3.8 இன்ச் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 1950 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம்
சமூக வலைத்தளங்களை இயக்க பிரத்தியேக பட்டன்களை கொண்டுள்ள கேலக்ஸி ஃபோல்டர் 2 கருப்பு மற்றும் கர்கண்டி நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 ஸ்மார்ட்போனின் விலையை பொருத்த வரை 297,000 won அதாவது இந்திய மதிப்பில் ரூ.17,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story






