என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை, சங்கு வளையல் கண்டெடுப்பு
    X

    விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குடுவை, சங்கு வளையல் கண்டெடுப்பு

    • வெம்பக்கோட்டை அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
    • தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்தது.

    இந்நிலையில், வெம்பக்கோட்டை 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை மொத்தமாக 3,210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×